புதுடெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக டெல்லி உச்சநீதிமன்ற வளாகத்தில் உள்ள மரத்தில் ஏறி தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு திருப்தி அளிக்கவில்லை எனக் கூறி உச்சநீதிமன்ற வளாகத்தில் உள்ள மரத்தின் மீது ஏறி நின்று தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.