×

மீண்டும் எகிறும் தங்கம் விலை!: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.40 உயர்ந்து, ரூ.35,720க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. இந்தியர்களுக்கு தங்கத்தின் மீது எப்போதுமே ஒரு தனி காதல் இருந்து வருகிறது. ஒருவரின் சமூக அந்தஸ்தை காட்டும் உலோகமாக, அவசர நிதி தேவைகளுக்கு உதவும் நண்பனாக, தங்கம் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் இந்தியாவில் முக்கிய பங்கு வகிக்கிறது. கொரோனா காலத்திலும் அதன் மீதான மோகம் குறைந்தபாடில்லை. தங்கம் வாங்கும் எண்ணத்தில் இருப்பவர்கள் அதை வாங்கவே வேண்டாம் என்று நினைக்கும் அளவுக்கு, சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. ஏதேனும் ஒரு சில நாட்கள் மட்டுமே விலைச் சரிவு காணப்படுகிறது. நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.4465- க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.35720-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ. 38632-க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை 40 பைசா குறைந்து ரூ.67.00-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரு கிராம் ரூ.4,465க்கும், ஒரு சவரன் ரூ.35,720- க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.66.60க்கு விற்கப்படுகிறது. …

The post மீண்டும் எகிறும் தங்கம் விலை!: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.40 உயர்ந்து, ரூ.35,720க்கு விற்பனை..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Indians ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு கால்நடை மருத்துவ...