×

மின்சாரம் பாய்ந்துமாற்றுத்திறனாளி பலி

பல்லாவரம்: பழைய பல்லாவரம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த மனோகர் (24), மாற்றுத்திறனாளியான இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது பெற்றோர் அருகில் உள்ள உறவினர் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு  வீட்டிற்கு வந்தனர். அவர்கள் குளிக்க வெந்நீர் போடும்படி மனோகரிடம் கூறினர். அதன்படி, மனோகர் குளியறைக்கு சென்று வாட்டர் ஹீட்டர் மூலம் வெந்நீர் போட முயற்சி செய்தார். அப்போது எதிர்பாராத விதமாக மனோகர் மீது மின்சாரம்  பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு, பெற்றோர் ஓடிவந்து, மனோகரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் மனோகர் வரும் வழியிலேயே இறந்தது  தெரியவந்தது. இதுகுறித்து பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்….

The post மின்சாரம் பாய்ந்துமாற்றுத்திறனாளி பலி appeared first on Dinakaran.

Tags : Pallavaram ,Manokar ,Old Pallavaram Pilliyar Koil Street ,Dinakaran ,
× RELATED மழைகால முன்னெச்சரிக்கை குறித்து...