×

மாமூல் கேட்டு தகராறு; ரவுடிக்கு சரமாரி வெட்டு: 4 பேர் கைது

திருவொற்றியூர்: எண்ணூரில் மாமூல் கேட்டு தகராறு செய்த ரவுடியை சரமாரியாக வெட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். எண்ணூர் அன்னை சத்தியவாணி முத்து நகரை சேர்ந்தவர் பிரபல ரவுடி தினேஷ் (25). இவர் மீது அடிதடி, கொலை முயற்சி போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர், நேற்று முன்தினம் அன்னை சிவகாமியின் நகரை சேர்ந்த ராஜேஷ் என்ற வாலிபரிடம் மாமூல் கேட்டு தகராறு செய்துள்ளார். மாமூல் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த ரவுடி தினேஷ், ராஜேஷை வெட்ட முயன்றுள்ளார். அங்கிருந்து தப்பிய ராஜேஷ், தனது நண்பர்களான மதன், மணி, கருப்பு மணி ஆகியோருடன் வந்து, தினேஷை மடக்கி பிடித்து, அவரிடம் இருந்த கத்தியை பிடுங்கி அவரையே சரமாரியாக வெட்டினர். இதில், தினேஷ் மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டது.  சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் தினேஷை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, ராஜேஷ் (30), மணி (29), கருப்பு மணி (28), மதன் (26) ஆகிய 4 பேரை நேற்று கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்….

The post மாமூல் கேட்டு தகராறு; ரவுடிக்கு சரமாரி வெட்டு: 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tiruvottiyur ,Ennoor ,Ennore ,
× RELATED திருவொற்றியூரில் பெண்ணை முட்டிய...