×

மாடித்தோட்டம் அமைப்பது குறித்து நாளை விழிப்புணர்வு கூட்டம்

 

ஈரோடு, ஜூலை 26: மாடித்தோட்டம் அமைப்பது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் ஈரோடு அருகே நாளை (27ம் தேதி) நடைபெற உள்ளது. இதுகுறித்து ஈரோடு வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை அதிகாரிகள் கூறியதாவது: மாடித் தோட்டம் அமைப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம் ஈரோடு அடுத்துள்ள கதிரம்பட்டி கிராம பஞ்சாயத்து சேவை மைய கட்டிடத்தில் நாளை (27ம் தேதி) காலை 11 மணிக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாமில் மாடி தோட்டம் அமைக்க விருப்பம் உள்ளவர்களும், மாடி தோட்டம் எவ்வாறு அமைப்பது, எந்த இடம் மாடித்தோட்டம் அமைக்க ஏற்றது, மாடித்தோட்ட பராமரிப்பு முறைகள் உள்ளிட்டவைகள் தொடர்பாக விளக்கமளிக்கப்படும். மேலும் ஏற்கனவே மாடித்தோட்டம் அமைத்தவர்களின் அனுபவங்கள் குறித்த கருத்து பரிமாற்றம் நடைபெற உள்ளது. மாடித்தோட்டம் அமைக்க விருப்பமுள்ளவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு கூறினர்.

The post மாடித்தோட்டம் அமைப்பது குறித்து நாளை விழிப்புணர்வு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Erode ,Dinakaran ,
× RELATED கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல்...