×

மலையில் நிர்வாணமாக அழுகிய சடலம் மீட்பு இளம்பெண்ணை பலாத்காரம் செய்து தலையில் கல்லைப்போட்டு கொலை-கண்ணமங்கலம் அருகே பயங்கரம்

கண்ணமங்கலம் : கண்ணமங்கலத்தில் மலைப்பகுதியில் நிர்வாணமாக அழுகிய இளம்பெண் சடலம் மீட்கப்பட்டது. அவரை மர்மநபர்கள் பலாத்காரம் செய்து தலையில் கல்லைப்போட்டு கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சந்தவாசல் அடுத்த எட்டிவாடி வனத்துறை அலுவலகம் பின்புறம் உள்ள மலை மீது நேற்று சிலர் கால்நடைகளை மேய்க்க சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதனால், சந்தேகமடைந்த கால்நடை மேய்ப்பவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது, நிர்வாணமாக அழுகிய நிலையில் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து சந்தவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில், அங்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். சடலம் நிர்வாணமாக அழுகிய நிலையில் கிடந்ததால், இளம்பெண்ணை யாரோ பலாத்காரம் செய்து கொலை செய்திருப்பார்கள் என்று போலீசார் கருதுகின்றனர். மேலும் தலைக்கு அருகில் பெரிய கருங்கல் இருந்ததால், கல்லைப்போட்டு கொன்றிருக்கலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து சந்தவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘இளம்பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதால் 1 மாதத்துக்கு முன்பு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. முதற்கட்டமாக இளம்பெண் யார் என்பது குறித்து அடையாளம் கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளோம். அவரை அடையாளம் கண்டுபிடித்ததும், கொலையாளிகளை விரைவில் கண்டறிந்து கைது செய்ய முடியும்’ என்றனர்.இளம்பெண் கொலை செய்யப்பட்டு, நிர்வாணமாக அழுகிய நிலையில் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வாட்ச், கொலுசு வைத்து விசாரணைஅழுகிய சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண் அணிந்திருந்த கால் கொலுசு, இடது கையில் இருந்த வாட்ச் ஆகியன அப்படியே இருந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து கொலையான இளம்பெண்ணை அடையாளம் காண, கடந்த 2 மாதங்களில் காணாமல் போன இளம்பெண்கள் குறித்து பல்வேறு போலீஸ் நிலையங்களில் தகவல்களை திரட்ட தொடங்கியுள்ளனர். இதனால் காணாமல் போன இளம்பெண்கள் அணிந்திருந்த கால் கொலுசு, வாட்ச் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்க்கும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர்….

The post மலையில் நிர்வாணமாக அழுகிய சடலம் மீட்பு இளம்பெண்ணை பலாத்காரம் செய்து தலையில் கல்லைப்போட்டு கொலை-கண்ணமங்கலம் அருகே பயங்கரம் appeared first on Dinakaran.

Tags : Kannamangalam ,
× RELATED ரூ.10,000 லஞ்சம் ; பெண் தாசில்தார் கைது