×

மனைவியை தவறாக பேசிய விவகாரம் மீன்கடை ஊழியர் படுகொலை: நண்பர் உள்ளிட்ட 2 பேர் கைது: பல்லாவரத்தில் பரபரப்பு

பல்லாவரம்: மனைவியை தவறாக பேசிய விவகாரத்தில் மீன்கடை ஊழியர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நண்பர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். பல்லாவரத்தில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரை சேர்ந்தவர் பாண்டியன் (45). பம்மல், நாகல்கேணியில் உள்ள மீன் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார். அதே மீன் மார்க்கெட்டில் வேலை பார்த்து வருபவர் சிரஞ்சீவி (26). இருவரும் நண்பர்கள். வழக்கமாக வேலை முடிந்ததும் இரவு நேரத்தில் மது அருந்துவார்கள். அதுபோன்று கடந்த 10ம் தேதி இரவு மது அருந்தியபோது, பாண்டியனின் மனைவியை சீரஞ்சீவி தவறாக பேசியுள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரையொருவர் திட்டிவிட்டு சென்று விட்டனர். இருப்பினும் பாண்டியனுக்கு ஆத்திரம் தீரவில்லை. நேற்று பல்லாவரத்தில் உள்ள சிரஞ்சீவி வீட்டுக்கு பாண்டியன் சென்றார். அங்கு சிரஞ்சீவி இல்லை. அவரது மனைவி பவானி இருந்தார். அவரை ஆபாசமாக திட்டி விட்டு பாண்டியன் சென்று விட்டார். இந்த விவகாரம் சிரஞ்சீவிக்கு தெரியவந்தது. உடனே நேற்றிரவு தனது நண்பர் ஹரி என்பவரை அழைத்து கொண்டு பாண்டியனை தேடி பைக்கில் பொழிச்சலூர் விநாயகபுரத்துக்கு சென்றனர். வீட்டில் இருந்த அவரை வெளியே அழைத்து வந்து தட்டி கேட்டனர். வாக்குவாதம் ஏற்பட்டது.  ஆத்திரத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாண்டியனை வெட்டிவிட்டு தப்ப முயன்றனர். அவர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதற்கிடையில் படுகாயமடைந்த பாண்டியனை மீட்டு, குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பாண்டியன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து சிரஞ்சீவி, ஹரி ஆகியோரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post மனைவியை தவறாக பேசிய விவகாரம் மீன்கடை ஊழியர் படுகொலை: நண்பர் உள்ளிட்ட 2 பேர் கைது: பல்லாவரத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Pallavaram ,PALLAWARM ,
× RELATED காரியம் ஆக வேண்டும் என்றால்...