×

மனிதநேய தொழிற்சங்கம் சார்பில் மே தின கொடியேற்று விழா

 

கோவை, மே 3: மனிதநேய மக்கள் கட்சியின் தொழிலாளர் பிரிவான மனித நேய தொழிற்சங்கத்தின் சார்பாக கோவை மத்திய மாவட்டம் முழுவதும் மனிதநேய தொழிற்சங்க கொடி ஏற்றும் நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் அபுதாஹிர் தலைமையில் நடைபெற்றது. கோட்டை மேடு, உக்கடம் பேருந்து நிலையம், சேரன் பேக்கரி உள்ளிட்ட பல இடங்களில் மனிதநேய தொழிற்சங்கத்தினர் கொடியேற்றி, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில், மனிதநேய மக்கள் கட்சி மாநில பொருளாளர் உமர், மாநில பிரதிநிதி சாதிக் அலி, மாவட்ட தலைவர் சர்புதீன், தமுமுக மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மமக மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் சிராஜ்தீன், 86 வது வார்டு மாமன்ற உறுப்பினர்

அஹமது கபீர்,  எஸ்எம்ஐ மாநில செயலாளர் அம்ஜத் அலிகான், செயற்குழு உறுப்பினர்கள் அப்பாஸ், சாகுல் ஹமீது, மொய்தீன் சேட், மாவட்ட துணைத்தலைவர் நூர்தின், மாவட்ட துணைச் செயலாளர்கள் அசாருதீன், ஹாரூன் ரஷீத், பைசல் ரஹ்மான், அணி நிர்வாகிகள் பசீர், ஜியாவுல் ஹக், இப்ராஹிம், அசாருதீன், செரீப், கிளை நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு முதலமைச்சர் 12 மணி நேரம் வேலை மசோதாவை நிறுத்தி வைத்ததை மனிதநேய தொழிற்சங்கத்தின் சார்பில் வரவேற்பதாக மாநில பொருளாளர் உமர் தெரிவித்தார்.

The post மனிதநேய தொழிற்சங்கம் சார்பில் மே தின கொடியேற்று விழா appeared first on Dinakaran.

Tags : May Day Flag Hoisting Ceremony ,Humane Union ,Coimbatore ,Humanity Union ,Humanity People's Party ,Coimbatore Central ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு பற்றி தெளிவான முடிவு எடுக்க வேண்டும்: பிரேமலதா பேட்டி