மஞ்சள் திருடிய 3பேர் கைது

சேலம், செப்.18: சேலம் பள்ளப்பட்டி மணிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி(52). இவர் லீ-பஜாரில் மஞ்சள் மண்டி நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களாக மண்டியில் இருந்த மஞ்சள் திருடப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று ரவியின் வீட்டிற்கு வந்த கடை ஊழியர்கள் மாணிக்கம்(48) மாயவன்(40) ஆகியோர் குடோன் சாவியை பெற்றுச்சென்றுள்ளனர். சந்தேகமடைந்த ரவி குடோனுக்கு வந்து பார்த்தபோது மாயவன், மாணிக்கம், நந்தகுமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து 10சாக்குகளில் இருந்த 670கிலோ எடை கொண்ட ₹1 லட்சத்து 54 ஆயிரத்து 100 மதிப்பிலான மஞ்சளை சரக்கு வாகனத்தில் ஏற்றிச்செல்ல முயன்றுள்ளனர். இதையடுத்து அருகில் இருந்தவர்களின் உதவியோடு அவர்களை பிடித்து பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து ரவி அளித்த புகாரின் பேரில் மாணிக்கம், மாயவன், நந்தகுமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், மஞ்சளை கடந்த முயன்ற சரக்கு வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post மஞ்சள் திருடிய 3பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: