×

மசூதிகளுக்கு சொந்தமான ரூ.750 கோடி சொத்துக்கள் மீட்பு: அமைச்சர் தகவல்

கலசபாக்கம்: தமிழகம் முழுவதும் மசூதிகளுக்கு சொந்தமான ரூ.750 கோடி சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக சிறுபான்மை துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கத்தில் சிறுபான்மை துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேற்று அளித்த பேட்டி: ரூ.6 கோடி மதிப்பீட்டில் மசூதிகள் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.6 கோடி மதிப்பீட்டில் தேவாலயங்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெற உள்ளன. மேலும் தற்போது பெறப்பட்ட மனுக்கள் மீது 10 நாட்களுக்குள் மீண்டும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பணிகள் தொடங்கப்படும். தமிழகம் முழுவதும் மசூதிகளுக்கு சொந்தமான ரூ.750 கோடி சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது’ என்றார்….

The post மசூதிகளுக்கு சொந்தமான ரூ.750 கோடி சொத்துக்கள் மீட்பு: அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Kalasapakkam ,Minority Affairs ,Minister ,Senji Masthan ,Tamil Nadu.… ,Dinakaran ,
× RELATED கலசபாக்கம் அருகே டயர் வெடித்ததில்...