×

மசாஜ் சென்டரில் விபசாரம்: பெண் கைது

 

கோவை, ஆக. 15: கோவையில் சில மசாஜ் சென்டர்களில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வருகின்றனர். இதில் கேரளா, ஆந்திரா, மும்பையில் இருந்து பெண்களை வரவழைத்து மாத சம்பவம் வழங்கி விபசாரத்தில் ஈடுபடுத்துகின்றனர். கோவை கணபதி பகுதியை சேர்ந்த 24 வயது வாலிபர் செல்வபுரம் பேரூர் மெயின் ரோட்டில் உள்ள மசாஜ் சென்டருக்கு சென்றார். அப்போது அங்கிருந்த பெண் ஒருவர் நீங்கள் மசாஜ் செய்த பின் கூடுதலாக பணம் கொடுத்தால் பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என அழைப்பு விடுத்தனர்.

இதற்கு மறுப்பு தெரிவித்த அந்த வாலிபர் அங்கிருந்து செல்வபுரம் போலீசுக்கு புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் அங்கே சென்று சோதனை நடத்தினர். அதில், மசாஜ் என்ற பெயரில் விபசார தொழில் நடைபெற்றது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் மசாஜ் சென்டரில் விபசாரம் நடத்திய கணபதி லே அவுட்டை சேர்ந்த மகேந்திரன் என்பவர் மனைவி சுபாஷினி (30) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post மசாஜ் சென்டரில் விபசாரம்: பெண் கைது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Kerala ,Dinakaran ,
× RELATED கோவை நீர் பிடிப்பு பகுதிகளில்...