×

பொன்னமராவதி பகுதியில் அங்கன்வாடி காலிப்பணியிடம் விரைவில் நிரப்ப வலியுறுத்தல்

 

பொன்னமராவதி, ஜூலை 17: பொன்னமராவதி பகுதியில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொன்னமராவதி ஒன்றியத்தில் 119 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்கள் வெறும் 50 பேரும், சமையலர்கள் 70 பேர் மட்டுமே உள்ளனர். ஒவ்வொரு பணியாளர்களும் இரண்டு அல்லது மூன்று மையங்களில் கூடுதலாக பணியாற்றுகின்றனர்.

பல்வேறு மையங்களில் கட்டிடங்கள் இல்லாமல் குழந்தைகள் அங்கன்வாடிக்கு செல்ல முடியாத நிலைமை பல இடங்களில் உள்ளது. அங்கன்வாடி மையங்களில் பணியாளர்கள் மற்றும் சமையலர்கள் இல்லாததால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அனுப்புவதற்கு தயங்குகின்றனர். மேலும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையும் நிலவுகிறது. எனவே பொன்னமராவதி ஒன்றியத்தில் காலியாக உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் உடனே நிரப்பி அங்கன்வாடி மையங்களை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பொன்னமராவதி பகுதியில் அங்கன்வாடி காலிப்பணியிடம் விரைவில் நிரப்ப வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Ponnamaravati ,Anganwadi ,Dinakaran ,
× RELATED பொன்னமராவதி ஒன்றியத்தில் கலைஞரின்...