கம்பம்: முல்லை பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்க வேண்டும் என வலியுறுத்தியும், அணையின் நீர்மட்டம் 138 அடியாக இருந்தபோதே உபரி நீரை திறந்து விட்ட கேரள அரசை கண்டித்தும், தேனி மாவட்டம், கம்பம் வஉசி திடலில் அதிமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ‘‘1979ல் கேரளாவில் சில அரசியல்வாதிகளும், பத்திரிகைகளும் பெரியாறு அணை பலம் இழந்துள்ளது என்று தெரிவித்தன. இதையடுத்து மத்திய நீர்வள ஆணையத்தின் உத்தரவின்படி அணையின் நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டது. அணையை பலப்படுத்திய பிறகும் நீர்மட்டத்தை கேரளா உயர்த்தவில்லை.