×

பெரியபாளையம் அருகே புதிய ஊராட்சி மன்ற கட்டிடம்: எம்.எல்.ஏ திறந்து வைத்தார்

பெரியபாளையம்: பெரியபாளையம் அருகே திருக்கண்டலம் ஊராட்சி மன்ற புதிய கட்டிடத்தை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராஜன் திறந்துவைத்தார். திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் திருக்கண்டலம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட ரூ. 17 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராஜன் தலைமை வகித்தார்.  தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆ.சத்தியவேலு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், ஸ்டாலின், ஒன்றியக்குழு உறுப்பினர் ரவி, ஊராட்சி துணைத் தலைவர் லிங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஊராட்சிமன்ற தலைவர் மதன்சத்யராஜ் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் தேவேந்திரன், அவைத்தலைவர் டி.கே.முனிவேல், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமச்சந்திரன், வெங்கடாசலம், வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் ரமேஷ் நன்றி கூறினார்….

The post பெரியபாளையம் அருகே புதிய ஊராட்சி மன்ற கட்டிடம்: எம்.எல்.ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : New panchayat council ,Periyapalayam ,MLA ,Kummidipoondi ,DJ Govindarajan ,Tirukandalam Panchayat ,Ellapuram, Tiruvallur district… ,New Panchayat ,Council ,
× RELATED பெரியபாளையம், திருக்கண்டலம் அரசு...