×

பெரியகுளத்தில் இடப்பிரச்னை ஓபிஎஸ் சகோதரர் மீது வழக்கு: ஓய்வு டாக்டர் புகாரின்பேரில் நடவடிக்கை

பெரியகுளம்: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் 2வது சகோதரர் ஓ.சண்முகசுந்தரம். இவர் தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சி 24வது வார்டு கவுன்சிலராக உள்ளார். பெரியகுளம் தென்கரை தெற்கு அக்ரஹார பகுதியில் (ஓபிஎஸ் வீடு அருகே) ஓ.சண்முகசுந்தரம் வாங்கிய இடத்திற்கு பக்கத்தில் ஓய்வு பெற்ற டாக்டர்களான திருமலை மற்றும் விமலா தம்பதி சொந்த வீட்டில் வசிக்கின்றனர். ஓபிஎஸ் சகோதரர் வாங்கிய இடத்தில் வீடு கட்டுவதற்கான முதற்கட்ட பணிகளுக்காக குழி தோண்டப்பட்டது. அப்போது அருகில் உள்ள டாக்டரின் வீட்டின் அஸ்திவாரம் சேதமடைந்தது. இதனை சரி செய்ய டாக்டர் திருமலை பணியாட்களை அனுப்பியுள்ளார். ஆனால் அங்கு பணியாட்களை பணி செய்யவிடாமல் தடுத்து திருமலை மற்றும் விமலாவுடன் ஓ.சண்முகசுந்தரம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து தென்கரை போலீசில் டாக்டர் தம்பதி நேற்று புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார், ஓ.சண்முகசுந்தரம் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். ஓ.சண்முகசுந்தரம் கூறும்போது ‘‘நானும் அவர்கள் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளேன்’’ என்றார்….

The post பெரியகுளத்தில் இடப்பிரச்னை ஓபிஎஸ் சகோதரர் மீது வழக்கு: ஓய்வு டாக்டர் புகாரின்பேரில் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags :
× RELATED நடுவானில் கோளாறு – விமானம் அவசரமாக தரையிறங்கியது