×

பெரம்பலூர் பாளையம் அருகே மழையால் சாலையில் பள்ளம் சீரமைப்பு பணியில் எஸ்எஸ்ஐ

பெரம்பலூர் : பாளையம் அருகே மழையின் காரணமாக சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை பெரம்பலூர் மாவட்ட நெடுஞ்சாலை ரோந்து சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் சரி செய்யும் பணியில் ஈடுபட்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் பெரம்பலூரில் இருந்து செஞ்சேரி செட்டிக்குளம் பிரிவு ரோடு வரை ஏற்கனவே இருவழிச் சாலையாக மாற்றப்பட்டு பயன்பாட்டில் உள்ள நிலையில், தற்போது துறையூர் சாலையில் செஞ்சேரி பிரிவுரோடு தொடங்கி, துறையூர் புறவழிச் சாலைவரை செல்லும் சாலை இருவழிச் சாலையாக மாற்றும் பணி நடை பெற்று வருகிறது. இந்நிலையில் அந்த சாலையில் செஞ்சேரி – பாளையம் இடையே உள்ள சாலையில் புதிய பாலம் கட்டுவதற்காக மாற்றுப்பாதை தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. அ ந்த பாதையில் மழையின் காரணமாக ஏற்பட்ட பள்ள த்தில் வாகனங்கள் சென்று வர சிரமமாக இருந்ததால், அங்கு ரோந்து பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் முருகேசன் மற்றும் காவலர் சதீஷ் ஆகிய இருவரும் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தினை தற்காலிகமாக சரி செய்தனர். மேலும் சாலையை விரிவுபடுத்தும் பணியாளர்களிடம் வாகன ஓட்டிகள் பாது காப்பாக விபத்தின்றி வீடு செல்ல வசதியாக பணிகள் நடக்கும் இடங்களில் ரிப்ளெக்டர்களை ஸ்டிக்கர்களாக ஒட்டிவைத்தும், தற்காலிக பேரிகாடுகள் அமைத்தும் விபத்துகளை ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டனர்….

The post பெரம்பலூர் பாளையம் அருகே மழையால் சாலையில் பள்ளம் சீரமைப்பு பணியில் எஸ்எஸ்ஐ appeared first on Dinakaran.

Tags : SSI ,Perambalur Palace ,Perambalur ,Perambalur District Highway ,Dinakaran ,
× RELATED லஞ்சம் வாங்கிய எஸ்எஸ்ஐ, காவலர் அதிரடி சஸ்பெண்ட் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்