×

பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: கடை உரிமையாளர் கைது

தாம்பரம்: பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் ரம்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (21). தாம்பரம் அடுத்த செம்பாக்கம், வி.ஜி.பி பொன்நகர் பகுதியை சேர்ந்த அருண்குமார் (29) என்பவருக்கு சொந்தமான பர்னிச்சர் கடையில் கடந்த 2018ம் ஆண்டிலிருந்து விற்பனையாளராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், தன்னுடன் உல்லாசமாக இருந்தால் உனக்கு தேவையானதை செய்வேன், இல்லையென்றால் உன் குடும்பத்தை அழித்து விடுவேன் என ரம்யாவை அருண்குமார் மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. மேலும், கடையில் வேலை செய்யும் பெண்களின் ஏழ்மை நிலையை பயன்படுத்தி, அவர்கள் மீது அக்கறை உள்ளது போல் காட்டி அவர்களிடம் நெருக்கமாக பழகி, பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து சேலையூர் அனைத்து மகளிர் காவல் காவல் நிலையத்தில் ரம்யா புகார் அளித்தார். அதன்பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டு சேலையூர் காவல் உதவி ஆணையர் முருகேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தனிப்படை போலீசார் அருண்குமாரை கைது செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்….

The post பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: கடை உரிமையாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Ramya ,Pallikarana ,Sembakkam ,VGP ,Ponnagar ,Dinakaran ,
× RELATED வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல...