×

பெட்ரோல் பங்க் ஊழியரை கத்தியால் கிழித்த 6 பேர் கைது

பொன்னேரி:  பொன்னேரி அருகே வேளூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணதாசன் (25). பொன்னேரி அருகே மெதூரில் ஒரு தனியார் பெட்ரோல் பங்க்கில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்றுமுன்திநம் பெட்ரோல் போடும் பணியில் ஈடுபட்டிருந்தார். அங்கு 3 பைக்குகளில் பொன்னேரியை சேர்ந்த தீபக் (22), மணி (23), அபுபக்கர் (21), கண்ணன் (20), சித்திக் பாஷா (20), விஜி (24) ஆகிய 6 பேர் வந்து பெட்ரோல் போட்டுள்ளனர். அவர்களிடம் அதற்கான 987 ரூபாயை கண்ணதாசன் கேட்டுள்ளார்.ஆனால் அவர்கள் பணம் தரமறுத்து, கண்ணதாசனை பேனா கத்தியால் சரமாரி கிழித்துவிட்டு, அவருக்கு கொலைமிரட்டல் விடுத்து தப்பி சென்றனர். இப்புகாரின்பேரில் பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து,  தீபக் உள்பட 6 பேரையும் கைது செய்தனர். அவர்களின் 3 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். …

The post பெட்ரோல் பங்க் ஊழியரை கத்தியால் கிழித்த 6 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Ponneri ,Kannadasan ,Velur village ,Bonneri ,Medur ,Dinakaran ,
× RELATED வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால்...