×

சுதந்திரம் கிடைத்து என்ன பயன்...கதுவா சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் தேசத்திற்கே வெட்கக்கேடு : குடியரசுத் தலைவர் வேதனை

ஸ்ரீநகர்: கதுவா சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொல்லப்பட்ட சம்பவம் தேசத்திற்கே அவமானம் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆன நிலையிலும் குழந்தைகள், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது வெட்கக்கேடு என அவர் கூறியுள்ளார். காஷ்மீரின் கத்ரா பகுதியில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆன பிறகும் நாட்டின் எந்த பகுதியிலும் கதுவா சிறுமி பலாத்காரம் போன்ற சம்பவம் நடப்பது நாட்டிற்கே அவமானம். எந்த மாதிரியான சமூகத்தை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை சிந்திக்க வேண்டும்.

இனி எந்த சிறுமிக்கோ அல்லது பெண்ணிற்கோ இது போன்று பாதிப்பு ஏற்படாமல் உறுதி செய்வது நமது கடமை என்று கூறியுள்ளார். காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற மேரி கோம், மனிகா பத்ரா, மிராபாய் சானு, சங்கீதா சானு, மனு பகிர், வினேஷ் போகத், சாய்னா நெய்வால், ஹீனா சித்து போன்ற இந்தியாவுக்கு கவுரவத்தை தேடித் தந்துள்ளனர் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசியுள்ளார்.

Tags :
× RELATED 11 மணி நிலவரம்: ஹரியானாவில் 23% வாக்குப்பதிவு