×

புதன் சந்தையில் மாடுகள் விலை சரிவு

சேந்தமங்கலம், செப்.14: புதுச்சத்திரம் ஒன்றியம் புதன்சந்தையில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை மாட்டுச்சந்தை கூடுவது வழக்கம். திங்கட்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை மதியம் வரை நடைபெறும். சந்தையில் மாடுகளை வாங்க விற்க ஆந்திரா, கர்நாடகம், கேரளா, கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் உள்ளூர் விவசாயிகள், வியாபாரிகள் வருவார்கள். நேற்று முன்தினம் கூடிய சந்தையில் ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் இருந்து விற்பனை மாடுகள் குறைந்த அளவில் வந்திருந்தது. மாடுகளை வாங்க வெளி மாநில வியாபாரிகள் அதிக அளவில் வரவில்லை. மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து, கேரளாவுக்கு நேரடியாக அதிக அளவில் மாடுகள் இறக்குமதி செய்யப்படுவதாலும், தொடர் மழை காரணமாகவும், அங்கிருந்து வியாபாரிகள் மாடுகளை வாங்க வரவில்லை. இதன் காரணமாக மாடுகள் விலை குறைந்தது. இறைச்சி மாடுகள் ₹22 ஆயிரத்திற்கும், கறவை மாடுகள் ₹44 ஆயிரத்திற்கும், கன்று குட்டிகள் ₹14 ஆயிரத்திற்கு விற்பனையானது. மொத்தம் ₹1.60 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.

The post புதன் சந்தையில் மாடுகள் விலை சரிவு appeared first on Dinakaran.

Tags : Senthamangalam ,Puduchattaram ,Dinakaran ,
× RELATED இரு தரப்பு மோதலில் 4 வாலிபர்கள் கைது