×

பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் போலீசார் குழந்தைகளுக்கு மாநகர கமிஷனர் பாராட்டு

நெல்லை, மே 11: பிளஸ் 2 தேர்வில் 2022-23ம் ஆண்டு அதிக மதிப்பெண் பெற்ற நெல்லை மாநகர காவல் துறையினரின் முதல் 5 குழந்தைகளை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தனது அலுவலகத்துக்கு நேரில் அழைத்து பரிசு வழங்கி பாராட்டினார். நெல்லை மாநகர காவல் துறையில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளின் குழந்தைகளில், 2022-23ம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 5 மாணவ, மாணவிகளை நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தனது அலுவலகத்துக்கு நேரில் அழைத்து, அவர்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கி பாராட்டினார். அப்போது தலைமையிடத்து துணை கமிஷனர் அனிதா, நுண்ணறிவுப் பிரிவு உதவி கமிஷனர் மணிமாறன் உடனிருந்தனர்.

The post பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் போலீசார் குழந்தைகளுக்கு மாநகர கமிஷனர் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Nellai ,Nellai Municipal Police Department ,
× RELATED தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை...