×

பிளஸ் 1 வகுப்பு துணை தேர்வு 36 பேர் ஆப்சென்ட்

மதுரை, ஜூலை 6: மதுரை மாவட்டத்தில் நேற்று நடந்த பிளஸ் 1 துணை தேர்வு ஆங்கில பாடத்தில், 36 பேர் ஆப்சென்ட் ஆகினர். தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வெழுதாத மாணர்களுக்கான துணை தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதன்படி கடந்த 2ம் தேதி துவங்கிய இத்தேர்வுகள் ஜூலை 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் நேற்று ஆங்கில பாடத்திற்கான தேர்வு மதுரை மாவட்டத்தில் 8 மை யங்களில் நடைபெற்றது. இத்தேர்விற்கு 331 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் நேற்றைய தேர்வை 295 பேர் மட்டுமே எழுதினர். இதன்படி தேர்விக்கு விண்ணப்பித்திருந்த 36 பேர் ஆப்சென்ட் ஆகினர்.

The post பிளஸ் 1 வகுப்பு துணை தேர்வு 36 பேர் ஆப்சென்ட் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மதுரை மாநகரில் ஆடிக்காற்று...