×

பாபநாசம் தலையணை வழியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

 

விகேபுரம், ஜூலை 31: சேரன்மகாதேவி சப்.கலெக்டர் அர்பித் ஜெயின் நேற்று முன்தினம் தலையணைக்கு செல்லும் வழியில் உள்ள பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து செயல்பட்டு வந்த 10க்கும் மேற்பட்ட கடைகளை உடனடியாக அகற்றும்படி நகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

அவரின் உத்தரவுப்படி நேற்று நகராட்சி தலைவர் செல்வ சுரேஷ் பெருமாள் தலைமையில் ஆணையாளர் மகேஸ்வரன், மேலாளர் கணேசன், பணி மேற்பார்வையாளர் கோபிநாத், நகராட்சி சுகாதார ஆய்வாளர் பொன் வேல்ராஜ் உள்ளிட்டவர்கள் போலீஸ் பாதுகாப்புடன் அப்பகுதிக்குச் சென்று ஆக்கிரமிப்பு செய்த கடைகளை அகற்றினர். இதுபோன்று கடைகளை மீண்டும் இவ்விடத்தில் அமைத்தால் காவல்துறை மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டது.

The post பாபநாசம் தலையணை வழியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Babanasam Pillow Road ,Vikepuram ,Cheranmahadevi ,Sub-Collector ,Arbit Jain ,Thalaiyan ,
× RELATED பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் உயிர்ப்பலியை தடுக்க புதிய முயற்சி