×

பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பால்பவானிசாகர் அணை நீர்மட்டம் 87 அடியாக சரிவு

சத்தியமங்கலம், ஏப்.9: பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு கடந்த ஜனவரி 21ம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை 5 சுற்றுக்களாக புன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

தற்போது, கீழ்பவானி வாய்க்காலில் 2300 கன அடி தண்ணீரும், பவானி ஆற்றில் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக 800 கன அடி தண்ணீரும் என மொத்தம் 3100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. மேலும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 1156 கன அடியாக இருந்தது. அணை நீர்மட்டம் 87.38 அடியாகவும், நீர் இருப்பு 19.9 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணைக்கு நீர் வரத்து குறைந்துள்ள நிலையில் அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு காரணமாக நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

The post பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பால்
பவானிசாகர் அணை நீர்மட்டம் 87 அடியாக சரிவு
appeared first on Dinakaran.

Tags : Bhavanisagar dam ,Sathyamangalam ,Bhavanisagar ,Dinakaran ,
× RELATED நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை:...