×

பழநி நகரில் நாய்கள் தொல்லையால் மக்கள் அவதி

பழநி, ஆக. 9: பழநி நகரில் 33 வார்டுகள் உள்ளன. 1 லட்சத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். தவிர, பழநி கோயிலுக்கு தினமும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த சில தினங்களாக பழநி பகுதியில் தெருநாய்களின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. நடந்து செல்வோர், பைக்குகளில் செல்வோரை நாய்கள் விரட்டி, விரட்டி கடித்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை உள்ளது.

மேலும் நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு, வாகனங்களுக்குள் விழுந்து விடுவதால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, நகராட்சி நிர்வாகம் தெருவில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டுமென பொதுமக்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பழநி அரசு மருத்துவமனை மருத்துவர் ஒருவரிடம் கேட்டபோது கூறியதாவது: தற்போது நாளொன்றிற்கு 10 பேர் வரை நாய்க்கடி சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மருத்துவமனையில் தேவையான அளவிற்கு மருந்துகள் உள்ளன. நாய்கடிக்கு ஆளாகி மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார்.

The post பழநி நகரில் நாய்கள் தொல்லையால் மக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Palani ,Palani Nagar ,Dinakaran ,
× RELATED பழநி பைபாஸில் குப்பை கழிவுகளால் நோய்...