×

பரிசளிப்பு விழா

 

மானாமதுரை, ஜூன் 24: மானாமதுரை திருவள்ளுவர் ஆண்கள் சுய உதவி குழு ஆண்டு விழாவை முன்னிட்டு அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படித்து பொதுத்தேர்வில் முதல் இடம் பெற்ற மாணவ மாணவியருக்கு பாராட்டு பரிசளிப்பு விழா நடைபெற்றது, தலைவர் தேவதாஸ் தலைமை வகித்தார். செயலாளர் நாகலிங்கம் முன்னிலை வகித்தார். செர்டு தொண்டு நிறுவன இயக்குனர் எல். பாண்டி, முதுநிலை கணக்கு அதிகாரி செல்வராஜ், ஆசிரியர் பயிற்றுநர் காளிராஜா ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மாரியப்பன், மண்பாண்ட கூட்டுறவு சங்க தலைவர் லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தினர்.

The post பரிசளிப்பு விழா appeared first on Dinakaran.

Tags : Manamadurai ,Tiruvalluvar ,Men's Self Help Group Annual Celebration ,Schools ,Giving Ceremony ,Dinakaran ,
× RELATED தண்டவாளத்தை கடக்க முடியாமல் தடுமாறும் வாகன ஓட்டிகள்