பரமக்குடி பகுதியில் நான்கு நியாய விலை கடை திறப்பு

பரமக்குடி,ஆக.9: பரமக்குடி பகுதிகளில் 4 நியாய விலை கடைகளை எம்எல்ஏ முருகேசன் திறந்து வைத்தார். பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம், மீன் கடை தெரு, காட்டுப் பரமக்குடி, உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகள் வாடகை கட்டிடத்தில் இயங்கியது. இதனால், புதிய நியாய விலை கடைகள் கட்டி தர பொதுமக்கள் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் பரமக்குடி எம்எல்ஏ முருகேசனிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டின் நிதி 2022-2023 மற்றும் 2023-2024 கீழ் தலா 10 லட்சம் மதிப்பீட்டில் 4 புதிய நியாய விலைக் கடைகள் கட்டப்பட்டது. இதனை நேற்று எம்எல்ஏ முருகேசன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் வட்ட வழங்கல் அலுவலர் கீதா, நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி, வடக்கு நகர செயலாளர் ஜீவரத்தினம், தனி வருவாய் அலுவலர் கார்த்திக், பொதுக்குழு உறுப்பினர் அருளானந்த், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் வார்டு செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post பரமக்குடி பகுதியில் நான்கு நியாய விலை கடை திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: