×

ஸ்டெர்லைட் ஆலை வளாகம் முன் பெட்ரோல் குண்டு வீச்சு : போலீசார் விசாரணை தீவிரம்

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகம் முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் பெட்ரோல்குண்டு வீசிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பியது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடியில் 17 இடங்களில், 74வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிகாலை பைக்கில் வந்த மர்ம நபர்கள் ஸ்டெர்லைட் ஆலையின் கேட்டினை நோக்கி குண்டினை வீசியுள்ளனர்.

ஆனால் அது கேட்டின் உள்பக்கம் விழுகாமல் வெளிப்பக்கம் விழுந்து பாட்டில் உடைந்து தீ பிடித்து எரிந்துள்ளது. இதனை கண்ட தொழிற்சாலை காவலாளி சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விசாரணை நடத்தினர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags :
× RELATED மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்