×

நெல்லை மண்டல தலைமை மின் பொறியாளர் பொறுப்பேற்பு

நெல்லை, ஜூன் 10: மின்வாரிய நெல்லை மண்டல தலைமை மின் பொறியாளர் நேற்று பொறுப்பேற்றார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நெல்லை மண்டல அலுவலகத்திற்குட்பட்ட நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டத்தை உள்ளடக்கிய நெல்லை மண்டல தலைமை மின் பொறியாளராக குப்புராணி, நெல்லையில் நேற்று பொறுப்பேற்றார். இதுவரை கூடுதல் பொறுப்பு வகித்த நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி, அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார். நிகழ்ச்சியில் நெல்லை மின் பகிர்மான வட்ட மின் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு புதிய தலைமை மின் பொறியாளருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

The post நெல்லை மண்டல தலைமை மின் பொறியாளர் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Tags : Nellie Zone ,Nellai ,Chief Electrical Engineer ,Power Board ,Nellai Mandal ,Tamil Nadu Power Generation ,Dinakaran ,
× RELATED நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த விவசாயி உயிரிழப்பு