×

நெல்லை – திருச்செந்தூர் பாதையில் ரயில்களை 110 கி.மீ. வேகத்தில் இயக்க அனுமதி

நெல்லை: இன்னும் ஒரு மாதத்திற்குள் நெல்லை- திருச்செந்தூர் ரயில் பாதையில் இயக்கப்படும் ரயில்கள் 70 கி.மீ. வேகத்தில் இருந்து 110 கி.மீ. வேகத்தில் இயக்குவதற்கு தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது. இதனால் பயணிகளின் நேரம் மிச்சமாவதோடு விரைந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.  இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரை இணைக்கும் வகையில் நெல்லையில் இருந்து 61 கி.மீ. தூர ரயில் பாதை அமைந்துள்ளது. சென்னை, பாலக்காடு, வாஞ்சிமணியாச்சி, நெல்லை ஆகிய பகுதிகளில் இருந்து திருச்செந்தூருக்கு 7 ரயில்கள் இயக்கப்படுகின்றன. மறு மார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து இந்த 7 ரயில்கள் பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன. தற்போது இந்த பகுதியில் ரயில்கள் 70 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகின்றன. ரயில்களின் வேகத்தை அதிகரிக்க இந்த பகுதியில் ரயில் பாதை பலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தன. ரயில் வேக சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடைபெற்றது. இதையடுத்து நெல்லை -திருச்செந்தூர் ரயில்வே பிரிவில் ரயில்களை 110 கி.மீ. வேகத்தில் இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இன்னும் ஒரு மாத காலத்திற்குள் இந்த பகுதியில் ரயில்கள் 110 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும். *லூப்லைனில் 30 கிமீ வேகம் செங்கோட்டை- கொல்லம், திண்டுக்கல்- பழநி- பொள்ளாச்சி, மதுரை- விருதுநகர் ஆகிய ரயில் பிரிவுகளில் ரயில் நிலையங்களில் ரயில்கள் நேரடி ரயில் பாதையில் (மெயின் லைன்) இருந்து அருகிலுள்ள ரயில் பாதையில் (லூப் லைன்) பயணிக்கும் போது இதுவரை 15 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டது. இதுவும் தற்போது இந்தப் பகுதிகளில் 30 கி.மீ. வேகமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ரயில்களை வேகமாக இயக்குவதால் பயணிகளின் பயண நேரம் வெகுவாக குறைந்து அவர்கள் விரைந்து செல்ல வாய்ப்புள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. …

The post நெல்லை – திருச்செந்தூர் பாதையில் ரயில்களை 110 கி.மீ. வேகத்தில் இயக்க அனுமதி appeared first on Dinakaran.

Tags : Nellai – Tiruchendur ,Nellai ,Nellai-Tiruchendur ,Dinakaran ,
× RELATED நெல்லை மாநகர பகுதியில் சாலையில்...