×

நெல்லையில் ஆக.25ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

நெல்லை, ஆக. 23: நெல்லை மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 25ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து கலெக்டர் கார்த்திகயேன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:நெல்லை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 25ம் தேதி கலெக்டர் தலைமையில் கலெக்டர் அலுவலக வளாகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் வைத்து காலை 11.30 மணியளவில் நடக்கிறது.

கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க உள்ளனர். எனவே விவசாயிகள் குறை தீர்ப்பதற்காக நடக்கும் இந்தக் கூட்டத்தில் நெல்லை மாவட்ட விவசாயிகள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொள்ள ேவண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post நெல்லையில் ஆக.25ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Farmers Grievance Redressal Day ,Nellai. Paddy ,Nellai ,
× RELATED குறுவைத் தொகுப்பு திட்டத்தில் சிறு,...