×

நீலகிரியில் சுட்டெரிக்கும் வெயில் குளிர்பானம், ஐஸ்கிரீம் விற்பனை ஜோர்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் வெயில் வாட்டி வருவதால், ஐஸ் கிரீம், மோர், ஜூஸ், நொங்கு மற்றும் குளிர்பானங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. மலை மாவட்டமான நீலகிரியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை கோடை காலத்தில் கூட குளிர் வாட்டியெடுக்கும். ஆண்டு முழுவதும் ஸ்வெட்டர், சால்வை மற்றும் தொப்பி போன்ற வெம்மை ஆடைகளை அணிந்தே மக்கள் வெளியில் வருவார்கள். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நீலகிரியில் கடந்த சில மாதங்களாக பனி பொழிவு அதிகரிப்பால் பகல், இரவு நேரங்களில் குளிரால் மக்கள் அவதியடைந்து வந்தனர். ஆனால் ஜனவரி மாதத்திற்கு பின்சமவெளிப் பகுதிகளை போன்று வெயில் அதிகமாக காணப்படுகிறது. அதே சமயம் மாவட்டத்தின் பிறப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் ஊட்டியை காட்டிலும் சற்று அதிகமாக காணப்படுகிறது.இதனால் ஐஸ் கிரீம், குளிர்பானங்கள், பழரசம், இளநீர், நொங்கு மற்றும் மோர் போன்ற குளிர்ச்சியான பானங்களை குடிப்பதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், பெரும்பாலான ஓட்டல்கள் மற்றும் தேநீர் விடுதிகளில் தற்போது மோர் மற்றும் குளிர்பானங்கள் அதிகளவு விற்பனை செய்யத் துவங்கியுள்ளனர். சாலையோரங்களில் நொங்கு போன்றவைகளும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து ஓட்டல் உரிமையாளர்கள் கூறுகையில், ‘‘தற்போது வெயில் அதிகரித்துள்ளதால், பெரும்பாலான மக்கள் டீ மற்றும் காபி போன்றவைகளை குடிக்க ஆர்வம் காட்டுவதில்லை. அதே சமயம் மோர், ஐஸ் கிரீம், புரூட் ஜூஸ் போன்றவைகளையே விரும்பி சாப்பிடுகின்றனர். நாங்களும் மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப பகல் நேரங்களில் ஜூஸ், மோர், தயிர் வடை போன்ற குளிர்ச்சியான உணவு பொருட்கள் மற்றும் பானங்களை தரமாக தயாரித்து விற்பனை செய்கிறோம். தற்போது இவைகளின் விற்பனையும் அதிகரித்துள்ளது’’ என்றனர்….

The post நீலகிரியில் சுட்டெரிக்கும் வெயில் குளிர்பானம், ஐஸ்கிரீம் விற்பனை ஜோர் appeared first on Dinakaran.

Tags : Nilgiri ,Nilgiris ,
× RELATED நீலகிரி மாவட்ட விவசாய பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற முயற்சி