×

நிலத்தகராறில் முதியவர் மீது தாக்குதல்

 

விருத்தாசலம், ஆக. 27: விருத்தாசலம் காந்தி நகரை சேர்ந்தவர் நடன சபாபதி (74). இவருக்கு விருத்தாசலம் அருகே உள்ள க.இளமங்கலம் கிராமத்தில் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் பங்கு இருப்பதாக கூறி இளமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கதிரவன் என்பவருக்கும், நடன சபாபதிக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று சம்பந்தப்பட்ட நிலத்தில் நடன சபாபதி வேலை செய்து கொண்டிருந்தபோது அங்கு சென்ற கதிரவன் (55), அவரது சகோதரர் ராமரங்கப்பா மற்றும் உறவினர்கள் தவமணிகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேரும் சேர்ந்து நடன சபாபதி வயலுக்குள் டிராக்டருடன் சென்று உழவு ஓட்ட முயற்சித்துள்ளனர்.

இதனைப் பார்த்த நடனசபாபதி மாமியார் ஞானஜோதி (82) ஏன் எங்கள் நிலத்திற்குள் அத்துமீறி நுழைந்து பிரச்னை செய்கிறீர்கள் என கேட்டதற்கு அவரை திட்டி தாக்கியுள்ளனர். இதனை தடுக்க சென்ற நடன சபாபதியையும் திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து நடன சபாபதி கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார், கதிரவன் உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்கு பதிந்து கதிரவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நிலத்தகராறில் முதியவர் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Vridthachalam ,Nana Sabapathi ,Vriddhachalam Gandhi Nagar ,K.Ilamangalam ,Vrudhachalam ,Katiravan ,Ilamangalam ,on ,Dinakaran ,
× RELATED நிலத்தகராறில் முதியவர் மீது தாக்குதல்