×

நிலக்கோட்டையில் புதிய கிளை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி விரைவில் 600 கிளைகளாக திகழும் மண்டல மேலாளர் தகவல்

நிலக்கோட்டை, மார்ச் 28: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 10 புதிய கிளைகள் நேற்று நாடு முழுவதும் திறப்புவிழா கண்டன. இதில் 525வது கிளை நிலக்கோட்டையில் திறக்கப்பட்டது. இந்த கிளையை நிலக்கோட்டை தொழிலதிபர் சுசிதரன் திறந்துவைத்தார். புதிய ஏடிஎம் மையத்தை டாக்டர் அழகுராஜ் திறந்து வைத்தார். உமாசந்திரன் குத்துவிளக்கு ஏற்றினார். புதிய லாக்கர் பிரிவினை எஸ்.எஸ்.ராஜேந்திரன் துவக்கினார். கணினி பிரிவினை டாக்டர் சந்திரன் துவக்கி வைத்தார். இந்த விழாவில் வங்கியின் மதுரை மண்டல மேலாளர் கவுதமன் தலைமை வகித்து அனைவரையும் வரவேற்றார்.விழாவில் அவர் கூறியதாவது: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தனது 10 புதிய கிளைகளை இன்று திறந்துள்ளது. விரைவில் வங்கியின் மொத்த கிளைகளின் எண்ணிக்கை 600 ஆக உயரும். அடுத்த ஆண்டு முடிவதற்குள் வங்கி புதிதாக 100 கிளைகளை திறந்துவிடும். திறப்பு விழா கண்டுள்ள இந்த புதிய கிளை நிலக்கோட்டை மேன்மையடையவும், இங்குள்ளவர்கள் புதிய தொழில் தொடங்கவும் நிச்சயமாக உதவும். இந்த புதிய கிளையின் வாயிலாக மக்கள் பயனடைவதுடன், கிளைக்கும் ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு கூறினார். முடிவில் கிளை மேலாளர் தங்கபாண்டி ராஜ்குமார் நன்றி கூறினார்….

The post நிலக்கோட்டையில் புதிய கிளை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி விரைவில் 600 கிளைகளாக திகழும் மண்டல மேலாளர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Nilakottai ,Tamil Nadu Mercantile Bank ,Dinakaran ,
× RELATED வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கு பிடிவாரன்ட்