×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் தங்களுடைய வார்டுகளில் வாக்குகளை பதிவு செய்தனர்

சென்னை: சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் தங்களுடைய வாக்குகளை   முதல்நபராக சென்று பதிவு செய்தனர்.அதன்படி  சென்னை 141-வது வார்டில்   போட்டியிடும் திமுக வேட்பாளர் ராஜா அன்பழகன், சேப்பாக்கம் தொகுதி 114வது  வார்டு திமுக வேட்பாளர் மதன்மோகன், 163 -வார்டு வேட்பாளர் பூங்கொடி  ஜெகதீஸ்வரன், 167- வார்டு திமுக வேட்பாளர் துர்காதேவி நடராஜன், சென்னை  170-வது வார்டில்  காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் முத்தழகன்,  சென்னை 6-வது வார்டில்  காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும்  எம்.சாமுவேல் திரவியம், 165வது வார்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும்  நாஞ்சில் ஈஸ்வர பிரசாத், 83-வது வார்டில் உஷா நாகராஜன்,  7வது  வார்டில்  சுயேட்சையாக போட்டியிடும் ஆதி குருசாமி, 33-வது வார்டில் திமுக  சார்பில்  போட்டியிடும் குணசுந்தரி குட்டி மோகன், சென்னை மாநகராட்சி 92-வது  வார்டில்  காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஜி.முரளி, 182வது வார்டில் திமுக  வேட்பாளர் ஆறுமுகம், பெருங்குடி 186-வது  வார்டில் போட்டியிடும்  ஜெ.கே.மணிகண்டன், பெரம்பூர் சட்டமன்றத்திற்குட்பட்ட  37-வது வார்டில்  போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் டில்லிபாபு, தாம்பரம்  மாநகராட்சி 49  -வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் நகரமன்ற  துணை தலைவர்  காமராஜ், சென்னை, ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் திமுக  சார்பில் 38-வது  வார்டில் போட்டியிடும் நேதாஜி யு.கணேசன், தாம்பரம் மாநகராட்சி 43வது வார்டு  அதிமுக வேட்பாளர் மோகன், ஆகிய வேட்பாளர்கள்  முதல் நபராக சென்று  வாக்களித்தனர். மேலும் செங்கல்பட்டு நகராட்சி 2-வார்டு திமுக வேட்பாளர்  கிருஷ்ணமூர்த்தி, காஞ்சிபுரம் மாநகராட்சி 11-வது வார்டு திமுக வேட்பாளர்  சண்முக சுந்தரம், 37-வது வார்டு மதிமுக வேட்பாளர் மகேஷ், 18-வது வார்டு  திமுக வேட்பாளர் மல்லிகா ராமகிருஷ்ணன், 48வது வார்டு திமுக வேட்பாளர்  கார்த்திக், 32-வது வார்டு திமுக வேட்பாளர் காந்தி சீனிவாசன், 44-வது  வார்டு திமுக  வேட்பாளர் விஸ்வநாதன், பெரும்புதூர் பேரூராட்சி 11-வது  வார்டு திமுக வேட்பாளர் சகிலா குமார், 2-வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர்  நாராயணன், செங்கல்பட்டு நகராட்சி 7-வது வார்டு திமுக வேட்பாளர் மணிகண்டன்,  மறைமலைநகர் நகராட்சி 12-வது வார்டு திமுக வேட்பாளர் சண்முகம், தாம்பரம்  மாநகராட்சி 59 -வார்டு திமுக வேட்பாளர் ராஜேஸ்விரி சங்கர், மதுராந்தகம்  நகராட்சி 17-வது வார்டு திமுக வேட்பாளர் மலர்விழி குமார், திருவள்ளூர்  நகராட்சி 17-வது வார்டு திமுக வேட்பாளர் ராஜேஸ்குமார், கும்மிடிப்பூண்டி  பேரூராட்சி 3-வது வார்டு திமுக வேட்பாளர் சீனிவாசன் வாக்களித்தனர். …

The post நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் தங்களுடைய வார்டுகளில் வாக்குகளை பதிவு செய்தனர் appeared first on Dinakaran.

Tags : Urban Local Elections ,chennai ,chennai municipal elections ,141st Ward of Chennai ,Urban Local Election ,Dinakaran ,
× RELATED வாகன நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்: அறிக்கை தர சென்னை ஐகோர்ட் ஆணை