×

தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

 

காரைக்குடி, ஆக.27: காரைக்குடியில் ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆன்லைன் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கருப்பு தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் குமாரவேலு, நகர செயலாளர் வெங்கட், நகர தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிஐடியூ மாநில செயலாளர் தர், மாவட்ட பொதுச்செயலாளர் விஜயக்குமார், மாவட்ட துணைத்தலைவர் சசிவர்ணம், மாவட்ட துணைத்தலைவர் கணேசன், சிஐடியூ மாவட்ட துணைத் தலைவர் சிவக்குமார், மாவட்ட துணைச் செயலாளர் அழகர்சாமி, ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் போராட்டம் குறித்து விளக்கினர்.

ஆட்டோ தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை மாதம் ரூ.3000 வழங்க வேண்டும். தனியார் வங்கி, தனியார் நிதி நிறுவனம் அடாவடி வட்டி வசூல் செய்வதை கட்டுப்படுத்த வேண்டும். காரைக்குடியில் கட்டி முடிக்கப்பட்ட போக்குவரத்து துறை அலுவலக கிளையை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

The post தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Karaikudi ,Dinakaran ,
× RELATED கஞ்சா விற்றதாக வாலிபரை கைது செய்ய...