திருவள்ளூர்: ஐதராபாத்தில் உள்ள சானியா மிர்சா டென்னிஸ் அகாடமியில் தேசிய டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இந்த தேசிய டென்னிஸ் தொடர் போட்டி 16 வயதிற்குட்பட்டோருக்கான ஒற்றையர் பிரிவு நடைபெற்றது. இந்த ஒற்றையர் பிரிவு போட்டியில் சென்னை வேலம்மாள் வித்யாலயா இணைப்புப் பள்ளியின் 8ம் வகுப்பு மாணவி ஹரிதா கலந்துகொண்டு வெற்றிபெற்று தங்கம் வென்றார்.இவர் இறுதிப்போட்டியில் 6 – 1, 4 – 6, 6 – 1 என்ற செட் கணக்கில் ஆந்திராவைச் சேர்ந்த மிஸ் மனோக்ன்யா மதாசுவை தோற்கடித்து வெற்றியை நிலைநிறுத்தினார். இதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவி ஹரிதாயை வேலம்மாள் பள்ளி தாளாளர் எம்.வி.எம்.வேல்மோகன் மற்றும் முதல்வர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்….
The post தேசிய அளவிலான டென்னிஸ் போட்டி: வேலம்மாள் பள்ளி மாணவி தங்கம் வென்று சாதனை appeared first on Dinakaran.