×

தூத்துக்குடி குளக்கரையில் வாலிபர் மர்மச்சாவு

தூத்துக்குடி,ஆக.19: தூத்துக்குடி குளக்கரையில் மர்மமான முறையில் வாலிபர் இறந்து கிடந்தார். அவர் யார்? என போலீசார் வீசாரித்து வருகின்றனர். தூத்துக்குடி விஎம்எஸ் நகர் பகுதியில் சி.வ.குளம் உள்ளது. இந்த குளத்தை சுற்றிலும் மாநகராட்சி சார்பில் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நடைபாதை பணிகள் முடிவடையாத நிலையில் அந்த பகுதி பூட்டி வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் குளக்கரையின் நடைபாதையில் கிடந்தது. ரத்தம் வெளியேறிய நிலையில் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. தூத்துக்குடி சிப்காட் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்?, எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தூத்துக்குடி குளக்கரையில் வாலிபர் மர்மச்சாவு appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,
× RELATED தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்..!!