×

தூத்துக்குடி எஸ்பி ஆபீசில் மக்கள் குறைதீர் கூட்டம்

 

தூத்துக்குடி, ஏப். 27: தூத்துக்குடி எஸ்பி ஆபீசில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவுப்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆபீசில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன்படி நேற்று மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் நடந்த கூட்டத்தில், 35 மனுதாரர்கள் பங்கேற்று தங்களின் குறைகளை நேரடியாக தெரிவித்து அது தொடர்பான புகார் மனு அளித்தனர்.பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த போலீஸ் அதிகாரிகள், உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட போலீசாருக்கு உத்தரவிட்டனர்.இதில் காவல்துறையினர், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தூத்துக்குடி எஸ்பி ஆபீசில் மக்கள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Thoothukudi SP ,Thoothukudi ,Director General ,Tamil Nadu Police ,SP Office ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண...