×

தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக் கொன்ற ஆட்சி தான் அதிமுக ஆட்சி: மு.க.ஸ்டாலின்

தூத்துக்குடி: திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தூத்துக்குடியில் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்; வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த மண்ணில் வாக்கு கேட்டு வந்துள்ளேன். தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக் கொன்ற ஆட்சி தான் அதிமுக ஆட்சி. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மக்களால் மறக்க முடியாது. 13 பேரை ஈவு இரக்கமில்லாமல் சுட்டுக் கொன்றவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சடு சம்பவம் எனக்கு தெரியாது; டிவியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என கூறியவர் எடப்பாடி பழனிச்சாமி’ அவர் பதவியில் நீடிக்கலாமா? என கேள்வி எழுப்பினார்….

The post தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக் கொன்ற ஆட்சி தான் அதிமுக ஆட்சி: மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Thoothukudi ,M.K.Stalin. ,M. K. Stalin ,DMK ,Veerapandia ,M.K.Stalin ,
× RELATED தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண...