×

திருமங்கலம் கோர்ட்டில் மயங்கிய முதியவர் பலி

 

திருமங்கலம், ஜூன் 23: திருப்பரங்குன்றம் அருகே ஹார்விபட்டியை சேர்ந்தவர் தனுசுராம் (65). இவர் நேற்று வழக்கு விசாரணைக்காக திருமங்கலம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்திற்கு வந்தார். விசாரணையின் அழைப்பிற்காக நீதிமன்றத்தின் வெளியே காத்திருந்த போது இவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு மயக்கமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தனுசுராம் உயிரிழந்தார். இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருமங்கலம் கோர்ட்டில் மயங்கிய முதியவர் பலி appeared first on Dinakaran.

Tags : Thirumangalam Court ,Thirumangalam ,Dhanushuram ,Harveypatti ,Tiruparangunram ,Tirumangalam ,Tirumangalam Court ,
× RELATED மதுரை, கோவையில் அமைய உள்ள மெட்ரோ ரயில்...