- மாநில போக்குவரத்து நிறுவனம்
- திருப்பூர்
- தெற்கு
- பொது மேலாளர்
- மண்டலம்
- அரசாங்க போக்குவரத்து நிறுவனம்
- Mariyappan
- தமிழ்நாடு அரசு போக்குவரத்து
திருப்பூர்: அரசு போக்குவரத்து கழக திருப்பூர் மண்டல பொது மேலாளர் மாரியப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருப்பூர் மண்டலம் சார்பில் திருப்பூரில் இருந்து ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தென் மாவட்டங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகிறது. திருப்பூர் மற்றும் சுற்றுப்புற ஊர்களில் இருந்து மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, சேலம் போன்ற ஊர்களுக்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழித்தட பஸ்களுடன் கூடுதலாக 35 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். பயனிகள் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post திருப்பூர் இருந்து தென் மாவட்டங்களுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 35 கூடுதல் பஸ் அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு appeared first on Dinakaran.