×

திருத்துறைப்பூண்டியில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் ஆர்ப்பாட்டம்

 

திருத்துறைப்பூண்டி, ஜூலை 22: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு அனைத்திந்திய மாணவர் பெருமன்ற சார்பில் மணிப்பூரில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்திந்திய மாணவர் பெருமன்ற கிளை நிர்வாகி மார்ட்டின் தலைமையிலும், ரோஷினி முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் தங்கள் கோரிக்கையை விளக்கி மாவட்டச் செயலாளர் வீரபாண்டியன் பேசினார். இதில் மாவட்டத் தலைவர் பாரதிச்செல்வன், மாவட்ட பொருளாளர் கோபி, மாவட்ட குழு உறுப்பினர் பிரசன்னா, பிரகாஷ், கல்லூரி நிர்வாகிகள் அருண்குமார், அரவிந்தன், ஆகாஷ், யோகேஷ், சங்கரி, சங்கவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post திருத்துறைப்பூண்டியில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : All India Students Forum ,Thiruthurapundi ,Thiruthaurapoondi ,All India ,Thiruthaurapoondi Government College of Arts and Science ,Tiruvarur ,All India Students Forum protest ,Dinakaran ,
× RELATED சென்னை பல்கலைக்கழகத்துக்கு...