×

திருக்கோவிலூரில் குட்கா விற்றவர் கைது

 

திருக்கோவிலூர், ஜூலை 17: திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் காசி மகன் மணிகண்டன் (38). இவர், அதே பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் திருக்கோவிலூர் காவல் நிலைய போலீசாருக்கு, மணிகண்டன் தடை செய்யப்பட்ட குட்கா விற்பதாக வந்த ரகசிய தகவலையடுத்து, உதவி ஆய்வாளர் ராஜசேகர் மற்றும் போலீசார் டீக்கடைக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது மணிகண்டன் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், மணிகண்டன் மீது வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post திருக்கோவிலூரில் குட்கா விற்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Gutka ,Thirukovilur ,Kashi Makan Manikandan ,Dinakaran ,
× RELATED திருக்கோவிலூர் அருகே மின்சார டிரான்ஸ்பார்மர் வெடித்து பயங்கர தீ விபத்து