×

திண்டுக்கல் அருகே லாரி மோதி இளைஞர் பலி

திண்டுக்கல், ஜூலை 30: வேடசந்தூர் அருகே எரியோடு இலப்பார்பட்டியை சேர்ந்தவர் அரசபாண்டி (18). இவர் நேற்று முன்தினம் எரியோட்டில் இருந்து டூவீலரில் வத்தலகுண்டுவில் உள்ள அவரது உறவினரை பார்க்க சென்றார். பெரிய பள்ளப்பட்டி பிரிவு அருகே சென்ற போது எதிரே திண்டுக்கல் அரண்மனைக்குளத்தை சேர்ந்த தெய்வேந்திரன் (50) என்பவர் ஓட்டி வந்த லாரி இவரது டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அரசபாண்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அரசபாண்டி உயிரிழந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா எஸ்ஐ பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post திண்டுக்கல் அருகே லாரி மோதி இளைஞர் பலி appeared first on Dinakaran.

Tags : Dindigul Dindigul ,Arasapandi ,Eriodu Ilapparpatti ,Vedasandur ,Eriot ,Wattalagundu ,Dindigul ,Periya Pallapatti ,Dinakaran ,
× RELATED நர்சிங் மாணவி, சிறுமி மாயம்