×

திண்டுக்கல் அருகே மரம் சரிந்து விழுந்து லாரி டிரைவர் பலி சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர்

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே மரம் சரிந்து விழுந்ததில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த லாரி டிரைவர் பலியானார். சத்தீஸ்கர் மாநிலம், ஜோர்பா மாவட்டத்தை சேர்ந்தவர் பிரமோத் குமார் (34). லாரி டிரைவர். இவரது மனைவி நிஷாசுக்லா (32). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர் உள்ளனர். பிரமோத் குமார், கடந்த ஒரு மாதமாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள லாரி டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் தூத்துக்குடியில் இருந்து லாரியில் மரங்களை ஏற்றி கொண்டு திண்டுக்கல் கொட்டப்பட்டி பிரிவில் உள்ள ஒரு மரக்கடைக்கு இறக்குவதற்காக லாரியை நிறுத்தினார். லாரியில் இருந்து மரங்களை இறக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக கீழே நின்று கொண்டிருந்த பிரமோத் குமார் மீது மரங்கள் சரிந்து விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரமோத் குமார் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரில் திண்டுக்கல் தாலுகா எஸ்ஐ பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post திண்டுக்கல் அருகே மரம் சரிந்து விழுந்து லாரி டிரைவர் பலி சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Chhattisgarh ,Jorpa ,Dinakaran ,
× RELATED மாணவி பாலியல் புகாரில் உண்மையில்லை: திண்டுக்கல் போலீஸ் விளக்கம்