×

‘திண்டுக்கல்’லை நசுக்க பார்க்கும் ‘நத்தம்’: மெகா பிளானால் மிரளும் அதிமுகவினர்

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கும், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வாதனுக்கும் மோதல் தீர்ந்தபாடில்லை. சமீபத்தில் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் நத்தம் விஸ்வநாதன் பேசிக்கொண்டிருக்கும் போதே, திண்டுக்கல் சீனிவாசன் பாதியில் எழுந்து சென்றது இருவருக்குமிடையேயான மோதலை பட்டவர்த்தனமாகக் காட்டியது. வரும் தேர்தலில் திண்டுக்கல் சீனிவாசனை தோற்கடித்தால், கட்சியில் அவர் டம்மியாகி விடுவார். நமது கை ஓங்கி விடுமென  நத்தம் விஸ்வநாதன் தரப்பு கணக்கு போட்டுள்ளதாம். பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் எதிர்ப்பு, உளறல் பேச்சால் சர்ச்சை என ஏற்கனவே திண்டுக்கல் சீனிவாசன் கடும் அப்செட்டில் உள்ளார். இந்த சூழலில் ‘நத்தம்’ தரப்பு ஒரு மெகா பிளானை களமிறக்கி உள்ளார்களாம்.ஏழு சாதிகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்ற அறிவிப்புக்கு, வெள்ளாளர் சமுதாயத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அரசாணைக்கு பரிந்துரை செய்த அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து, அக்கட்சி வேட்பாளர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் போராட்டம் நடத்தி வருகின்றனர்.திண்டுக்கல் தொகுதியில் வெள்ளாளர் சமுதாயத்தினர் 40 சதவீதம் உள்ளனர். இவர்கள் சார்பில் வெள்ளாளர் சமுதாயத்தை சேர்ந்த ராஜா போட்டியிடுகிறார். வெள்ளாளர் சமுதாய ஓட்டு இல்லாமல் திண்டுக்கல் சீனிவாசன் ஜெயிப்பது கஷ்டம். எனவே அவரை தோற்கடிக்க அந்த சமூகத்தினரில் சிலரை நத்தம் விஸ்வநாதன் சந்தித்து, அமைச்சராக இருந்தும் இப்பிரச்னையை பற்றி பேசவில்லை என கூறியதாக தெரிகிறது. இந்தத் தகவல் திண்டுக்கல் சீனிவாசன் தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே வெள்ளாளர் சமுதாயத்தை கூலாக்க நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறாராம். என்னதான் சமாதானம் செய்தாலும், திண்டுக்கல் சீனிவாசன் தோற்பது உறுதி என்றே நத்தம் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அதே நேரம் அமைச்சர் தரப்பு ஆதரவாளர்களும் நத்தம் விஸ்வநாதன் தொகுதியில், சில உள்ளடி வேலைகளை செய்ய தயாராகி வருகிறார்களாம். …

The post ‘திண்டுக்கல்’லை நசுக்க பார்க்கும் ‘நத்தம்’: மெகா பிளானால் மிரளும் அதிமுகவினர் appeared first on Dinakaran.

Tags : Minister ,Dintukal Sinivasan ,Natham Viswadh ,Dintukal ,Dindikal ,Dinakaran ,
× RELATED மதத்தை தவிர பேசுவதற்கு பாஜகவினரிடம்...