×

திண்டுக்கல்லில் 72 சதவீதம் வரி வசூல்

திண்டுக்கல், பிப். 29: தமிழகத்தில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நடப்பு நிதியாண்டிற்கான நிலுவையில் உள்ள வரி இனங்களை வரும் பிப்.29ம் தேதிக்குள் நூறு சதவீதம் வசூல் செய்ய நகராட்சி நிர்வாக இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி திண்டுக்கல் மாநகராட்சியில் 2023-2024 நடப்பு நிதி ஆண்டிற்கான செலுத்தப்பட வேண்டிய வரி, வரையற்ற இனங்கள் பொதுமக்கள் விரைவாக செலுத்த வசதியாக 17.02.2024 முதல் 29.02.2024 வரை அனைத்து சனி, ஞாயிறு விடுமுறை தினங்கள் என அனைத்து நாட்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கணினி வரிவசூல் மையங்கள் கூடுதல் கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. இதுவரை 72 சதவீதம் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post திண்டுக்கல்லில் 72 சதவீதம் வரி வசூல் appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Tamil Nadu ,Dindigul Corporation ,Dinakaran ,
× RELATED அரசு போக்குவரத்து கழக கிளையில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு