×

திண்டுக்கல்லில் வெல்டிங் தொழிலாளி தற்கொலை

 

திண்டுக்கல், ஜூன் 19: திண்டுக்கல் மருதாணிகுளம் பகுதியை சேர்ந்தவர் தனபால் (25). திண்டுக்கல்லில் உள்ள ஒரு கடையில் வெல்டிங் ெதாழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரது பெற்றோர் இறந்த பின் தனியாக வசித்து வந்த இவர், கடும் மனஉளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று, தனபால் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த திண்டுக்கல் நகர் மேற்கு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திண்டுக்கல்லில் வெல்டிங் தொழிலாளி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Dhanapal ,Marutanikulam ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி புட் நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு!