×

திங்கள்சந்தை பேரூராட்சியில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு பேரணி

திங்கள்சந்தை, அக். 12: தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு செட்டியார்மடம் அரசு நடுநிலைப்பள்ளி முதல் பெருங்கோடு சமூக நலக்கூடம் வரை நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணிக்கு பேரூராட்சி துணைத் தலைவர் றீத்தம்மாள் தலைமை வகித்தார். பேரணியில் கலந்து கொண்ட மாணவ மாணவியர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். இதில் கவுன்சிலர் சுஜாதா, பேரூராட்சி பணியாளர்கள், செட்டியார்மடம் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

The post திங்கள்சந்தை பேரூராட்சியில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Information ,Awareness Rally ,Market Municipality ,Right to ,Awareness Week ,Chettyarmadam Government Middle School ,Right to Information ,Tingalshandi Municipality ,Dinakaran ,
× RELATED அரசு மருத்துவமனையில் உலக இருதய தின விழிப்புணர்வு பேரணி